லிங்குசாமி தயாரிப்பில் வெளியான உத்தமவில்லன் திரைப்படம் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டாலும் ரசிகர்களுக்கு அந்த சமயத்தில் திரையில் கொண்டாட்ட படமாக அமையவில்லை. அந்த நேரத்தில் வெளியான மற்ற படங்களுடன் போட்டி போட்டு நல்ல தரமான ஒரு படம் தோல்வியடைந்துவிட்டதாக திரைப்பட விமர்சகர்களும் தெரிவித்திருந்தனர்.
லிங்குசாமியின் படங்கள் தோல்விக்கும் அவரது திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நஷ்டமடைந்ததுக்கும் காரணம் கமல்ஹாசன்தான் என்று பலரும் அவதூறு கிளப்பி வந்தனர். பலரும் இதுகுறித்து பேசியுள்ள நிலையில், தற்போது லிங்குசாமியே இதனை மறுத்துள்ளார்.
கமல்ஹாசன் விக்ரம் படம் மாதிரியான ஒரு ஆக்ஷன் கதையைத் தான் முதலில் கூறினார் ஆனால் அந்த கதையை அந்த நேரத்தில் எங்களால் தயாரிக்க முடியவில்லை. அதன்காரணமாக மாற்று கதையைக் கேட்டதும் இந்த கதை எங்களுக்கு மிகவும் பிடித்திருந்ததன் காரணமாக இதனை படமாக எடுத்தோம்.
கமல்ஹாசன் லிங்குசாமியின் படம் தோற்கவேண்டும் என்றோ பட நிறுவனத்தை இழுத்து மூட வேண்டும் என்றோ உள்நோக்கத்துடன் செயல்படவே இல்லை எனும்போது இந்த பேச்சே தவறு. கமல்ஹாசன் சார் எனக்கு இன்னொரு படம் செய்து தருவதாக கூட கூறியிருந்தார்.
இப்போது எங்களிடம் ஒரு கதை இருக்கிறது. அது கமல்ஹாசன் மற்றும் மம்மூட்டி ஆகியோரை வைத்து படமாக்க நினைத்திருந்த கதை. ஆனால் இப்போது கமல்ஹாசன், பஹத் பாசில் ஆகியோரை வைத்து எடுக்கலாமா என ஆலோசித்து வருகிறோம். கமல் சார் ஓகே சொல்லிவிட்டால் உடனே தயாராகிவிடுவோம் என்று தெரிவித்துள்ளார் லிங்குசாமி.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…