அப்படி என்ன வாயைப் பிளக்கும் விசயம் என்கிறீர்களா? இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - கமல்ஹாசன் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற பேச்சுக்களை வீடியோவாக பதிவு செய்தால் அதை வைத்தே 2,3 படங்கள் எடுக்கலாம். அந்த அளவுக்கு கண்டென்ட் இருக்கிறது. சமீபகாலமாக லோகேஷ் கனகராஜ் கொடுக்கும் பேட்டிகளில் ஒவ்வொன்றாக வெளியே வந்துகொண்டிருக்கிறது.
கமல்ஹாசன் நடித்திருக்கும் விக்ரம் படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷுக்கு எப்படி கிடைத்தது என்பது முதல் எப்படி ஒப்பந்தம் கையெழுத்தானது, எப்படி படம் துவங்கியது, கதை எப்படி தயாரானது என பல விசயங்களையும் பேசி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இன்னும் 3 தினங்களில் விக்ரம் படம் ரிலீசாகவுள்ள நிலையில், இன்னொரு விசயமும் வெளியாகியுள்ளது. கமல்ஹாசனிடம் இருக்கும் கலெக்ஷனைத் தெரிந்து கொண்ட லோகேஷ் வாயடைத்துப் போய்விட்டாராம். அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளவில்லை என்கிறார் லோகேஷ்
விக்ரம் படம் முழுக்க முழுக்க துப்பாக்கிகளை மையமாகக் கொண்ட படம் என்பதால் 500 முதல் 800 துப்பாக்கிகள் வரை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் சில துப்பாக்கி வகைகள் கிடைக்காத நிலையில், கமல்ஹாசனிடம் கேட்க, அவர் குடோனுக்கு லோகேஷை அழைத்துச் சென்றிருக்கிறார். இதில் ஒரு துப்பாக்கி மிக அதிக விலை கொண்ட, அரிய வகையிலான துப்பாக்கியும் இருந்துள்ளதாம். அது ஹிட்லர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி என்றும் அது கமல்ஹாசனின் துப்பாக்கி கலெக்ஷனில் இருப்பது அறிந்து பிளந்த வாயை மூடவில்லை லோகேஷ் கனகராஜ்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…