விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று மகாநதி. நான்கு சகோதரிகளின் வாழ்க்கைக் கதையை சித்தரிக்கும் இந்த தொடர், தந்தையை இழந்து எப்படி சமூகத்தில் உயர்ந்த நிலைக்குச் செல்ல முயற்சிக்கின்றனர் என்பதை விவரிக்கிறது. இந்தப் பதிவில், மகாநதி சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் விவரங்கள், தயாரிப்பு, ஓடிடி விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைக் காணலாம்.
மகாநதி சீரியல் விவரங்கள்
மகாநதி சீரியல் ஒளிபரப்பாகும் நாள் மற்றும் நேரம், இயக்குநர், தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், ஓடிடி தளம் போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
சீரியல் பெயர் |
மகாநதி |
வகை |
நாடகம் |
சேனல் |
விஜய் டிவி |
வெளியீடு |
23 ஜனவரி 2023- தற்போது |
இயங்கும் நேரம் |
22-24 நிமிடங்கள் |
நாள் |
திங்கள் முதல் வெள்ளி வரை |
நேரம் |
09:30 PM- 10:00 PM |
இயக்கம் |
பிரவீன் பென்னட் |
தயாரிப்பு நிறுவனங்கள் |
க்ளோபல் வில்லேஜர்ஸ் |
நெட்வொர்க் |
ஸ்டார் விஜய் |
மகாநதி சீரியல் நடிகர் நடிகை பெயர் பட்டியல்
இதில், மகாநதி சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் உண்மையான பெயர் விவரங்களை இதில் காணலாம்.
உண்மையான பெயர் |
கதாபாத்திர பெயர் |
சரவணன் |
சந்தானம் |
சுஜாதா சிவக்குமார் |
சாரதா |
ப்ரதீபா |
கங்கா |
லக்ஷ்மி ப்ரியா |
காவேரி |
ஆதிரை சௌந்தரராஜன் |
யமுனா |
காவியா |
நர்மதா |
கமுருதின் |
குமரன் |
ருத்ரன் ப்ரவீன் |
நிவின் |
சஞ்சய் மோகன் |
ராகவ் |
சுமி சந்தோஷ் |
ஜெயா |
விஷ்வா மித்ரன் |
சலிம் |
விஜய் டிவி சீரியல் மகாநதி கதை
இந்த தொடர், நான்கு சகோதரிகள் தந்து தந்தையை இழந்து எவ்வாறு சமூகத்தில் உயர் நிலைக்கு வரப்போகிறார்கள் என்பதை சித்தரிக்கிறது.
கங்கா, யமுனா, காவேரி, நர்மதா என நான்கு சகோதரிகள் சந்தானம் மற்றும் சாரதாவின் மிகவும் அன்பான மகள்கள். சந்தானம், வெளிநாட்டில் வேலை பார்த்து வீடு திரும்பியுள்ளார். சந்தானத்தின் சகோதரி மகனான குமரன் கங்காவை சிறு வயது முதலே காதலிக்கிறான். ஆனால், கங்காவிற்கு குமரனைத் திருமணம் செய்ய விருப்பமில்லாமல் இருந்தது. கங்கா தனது விருப்பத்தை சந்தானத்திடம் கூற, சந்தானம் வேறு மாப்பிள்ளையுடன் நிச்சயம் நடத்தினார்.
மேலும், குடும்பம் முழுவதும் அளவில்லா சந்தோஷத்தோடு திருமணம் செய்ய ஆரம்பித்தது. அதே சமயம், சந்தானம் சேர்த்து வைத்த பணத்தை அவரது நண்பர் பசுபதியிடம் கொடுத்து வைத்துள்ளார். மேலும், நிலம் ஒன்றும் வாங்கியுள்ளார். ஆனால், பசுபதி கடைசி நேரத்தில் பணம் வீணாகி விட்டதாகக் கூறியதால் சந்தானம் மனம் உடைந்தார். இதனால், வீட்டிற்கு வந்த சந்தானம் மன உளைச்சலில் படுக்கையிலேயே இறந்து விட்டார். அவரது மகள்கள் பெரும் வேதனையை அடைகிறார்கள். பிறகு சந்தானம் இல்லாமல், நான்கு சகோதரிகளும் எவ்வாறு தங்கள் வாழ்க்கைப் பயணத்தை செய்யப் போகிறார்கள் என்பதை மையமாகக் கொண்டு இக்கதை வழிநடத்தப்படுகிறது.
மகாநதி சீரியல் இன்றைய எபிசோட்
விஜய் டிவி மகாநதி சீரியல் இன்றைய எபிசோட் குறித்து இதில் காணலாம்.
மகாநதி சீரியல் ப்ரோமோ
திரைக்கு முன்னதாக, விஜய் டிவி நெட்வொர்க் ஒளிபரப்பும் மகாநதி சீரியல் ப்ரோமோவை இதில் காணலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…