Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முடிந்தது படப்பிடிப்பு... சீறுகொண்டு வரும் நானி!

UDHAYA KUMAR Updated:
முடிந்தது படப்பிடிப்பு... சீறுகொண்டு வரும் நானி!Representative Image.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நானி தனது அடுத்த படப்பிடிப்பை முடித்துவிட்டதாக அறிவித்துள்ளார். விரைவில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நிறைவடைந்து படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது படக்குழு. 

ஷ்யாம் சிங்கா ராய் மற்றும் அடடா சுந்தரா படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தெலுங்கு சினிமாவில் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களும் இந்த படத்தை விரும்பி பார்க்க காத்திருக்கின்றனர். 

புஷ்பா படம் மாதிரியான ஒரு கெட்டப்பில் இருக்கும் நானி நடிக்கும் இந்த படத்தின் பெயர் தசரா.  நானி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.  இந்த படத்துக்கு இசை சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு சத்யன் சூர்யன் இப்படி சுத்தி சுத்தி தமிழ் முகங்களே படத்தில் இருக்கின்றன. இதனால் தமிழகத்திலும் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 

இந்நிலையில் தசரா படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை நானி அறிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்