புதுமுக நடிகை ஒருவர் தன்னை பெயர் குறிப்பிடாமல் தாக்கியதாக கூறி அதற்கு பதிலளிக்கும் விதத்தில் அழகாக பேசிய நயன்தாராவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
நயன்தாரா நடிப்பில் கணெக்ட் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்துகொண்டிருப்பதால், நயன்தாரா அன் கோ சந்தோஷமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு நயன்தாரா பேசிய வீடியோ இன்று மிகப் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
டிடி நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாரா பல விசயங்களுக்கு பதிலளித்தார். தான் ஏன் புரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை என்பதற்கான காரணத்தையும் விளக்கினார்.
தான் ஆரம்ப காலத்தில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் துளியும் இல்லாத படங்களில்தான் நடித்தேன். ஒரு கட்டத்துக்கு மேல்தான் முக்கியத்துவம் பெற்றேன். மக்கள் கவனிக்கும் இடத்துக்கு வந்த பிறகு இது போன்ற புரமோசன் நிகழ்ச்சிகளுக்கு வரலாம் என நினைத்திருந்தேன். ஆனால் இப்போதும் என்னால் அது முடியவில்லை என்றார். இதற்கு காரணம் சினிமாவில் பெண்கள் மதிக்கப்படுவது இல்லை என்பதே என்றார்.
தான் ஒரு வீடியோ பார்த்ததாகவும், அதில் புதுமுக நடிகை ஒருவர் தன்னைப் பெயர் குறிப்பிடாமல் பேசியதைப் பற்றியும் தெரிவித்த நயன்தாரா, இதற்கான விளக்கத்தையும் அளித்தார்.
கமர்ஷியல் படங்கள் வேறு, நிஜமான கதைக்களங்கள் கொண்ட படங்கள் வேறு. குறிப்பிட்ட நடிகை பேசியது கமர்ஷியல் படத்தில் நிகழ்ந்தது. நான் சோகமாகத்தான் மேக்கப் போட்டு சென்றேன் ஆனால் இயக்குநருக்கு அது தேவையில்லை. கொஞ்சம் கிளாமரான முகம் தேவை என்பதால் அப்படி செய்தேன் என்றார்.
குறிப்பிட்ட நடிகை மாளவிகா மோகன்தான். அவர் முன்னர் ஒரு பேட்டியில் நயன்தாரா பெயரைக் குறிப்பிடாமல் அவர் ஹாஸ்பிட்டல் காட்சியில் மேக்அப் போட்டு நடித்ததைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…