தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் புதுமண தம்பதி என்றால் அது நயன்தாரா, விக்னேஷ் சிவன் தான் கடந்த 9ம் தேதி இருவருக்கும் மகாபலிபுரம் ரிசார்ட் ஒன்றில் திருமணம் நடந்து முடிந்தது.
இவர்களது திருமணத்துக்கு குறிப்பிட்ட பிரபலங்கள், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களின் திருமணம் தொடர்பான நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ எடுக்கப்பட்டு அது நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை இயக்குநர் கௌதம் மேனன் கவனித்து வருகிறார். இதற்காக நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 25 கோடி ரூபாய் வரை பெற்றுள்ளது இந்த தம்பதி.
திருமணம் முடிந்த கையோடு திருப்பதி சென்றவர்கள் பின் சென்னையில் ஊடக நிருபர்களை சந்தித்தனர். பின்னர் இருவரும் கொச்சிக்கு சென்றுள்ளனர். தற்போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி கொச்சியில் தனிமையை செலவிடுகிறார்கள் என கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…