கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்த நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதி கடந்த மாதம் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் செய்துகொண்டனர்.
மேலும் இவர்களுக்கு திருமணத்திற்க்கு மொத்தமாக 200 பேருக்கு மட்டும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்தது, அனைவரும் பிரபலங்கள் மற்றும் விஐபிக்கள் ஆவர். திருமணத்திற்கு வருபவர்களுக்கு கியூஆர் கோட் வழங்கப்பட்டு அதை ஸ்கேன் செய்தபின்னர்தான் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
திருமணத்திற்கு வருபவர்கள் புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
திருமணம் முடிந்த அன்று மதியம் திருமண புகைப்படங்கள் சிலவற்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். மேலும் மற்ற புகைப்படங்கள் ஏதும் வெளியாகாமல் இருந்தது. அதற்கு காரணம் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் இடம் திருமண புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை வெளியிட ஒப்பந்தம் பேசப்பட்டிருந்ததது.
ஆனால் கடைசி நேரத்தில் நெட்பிளிக்ஸ் பல்டி அடித்து விட்டதனால் தற்போது ஒரு மாதம் கழித்து நயன்தாரா திருமண புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
நெட்ப்ளிலிக்ஸ் நிறுவனத்திடம் 25 கோடி தந்தால் திருமண விடீயோவையோ தருகிறோம் உங்கள் தளத்தில் வெளியிடுங்கள் என கேட்டுள்ளனர், ஆனால் இந்த தொகை அதிகமாக உள்ளது, என தட்டிக்கழித்துவந்துள்ளது நெட்ப்ளிக்ஸ்,
எனவே நாட்களை கடத்தினால் ரசிகர்களுக்கு இந்த புகைப்படங்கள் பழையது போன்று ஆகிவிடும் யாரும் விரும்பமாட்டார்கள் என கூறி தற்போது வெளியிட்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…