காதல் ஜோடி பறவைகளான நயன்தாரா - விக்னெஷ் சிவன் இடையே முதல் முறையாக மோதல் வெடித்துள்ளதாக கோடம்பாக்க வட்டாரங்களில் பரவலாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
தென்னிந்தியத் திரைப்பட நடிகையான நயன்தாரா 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அடுத்ததாக 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார், இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.
நடிகையும் , தொழிலதிபருமான நயன்தாரா விக்னேஷ் சிவன் என்பவரை உருகி உருகி காதலித்து வந்தனர். இதனையடுத்து இவர்களின் திருமணம் கடந்த ஜூன் 9ம் தேதி அன்று மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணம் தொடர்பான புகைப்படங்களும் இனையத்தில் வைரலாகி வந்தன.
இந்த நிலையில் திருமணத்துக்கு பிறகு நயன் – விக்கி டையே முதன்முறையாக சண்டை வெடித்திருப்பதாக கூறப்படுகிறது. அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் நயனுக்கு பதில் சமந்தாவின் பெயரை விக்கி டிக் செய்ததே இந்த சண்டைக்கு காரணம் என தமிழ் சினிமா வட்டாரங்களில் பரவலாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்து வாக்குல இரண்டு காதல் படத்தில் கூட சமந்தாவுக்கு விக்கி முக்கியத்துவம் கொடுத்ததாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…