Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொங்கல் வைத்த நயன்தாரா.. வைரலாகும் புகைப்படம்!!

Sekar May 23, 2022 & 18:23 [IST]
பொங்கல் வைத்த நயன்தாரா.. வைரலாகும் புகைப்படம்!!Representative Image.

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனை விரைவில் திருமணம் செய்ய உள்ள நிலையில், விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவில் இருவரும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தியுள்ளனர்.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி விரைவில் திருமணம் செய்ய உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக உள்ளனர். இந்நிலையில் விக்னேஷ் சிவனின் சொந்த ஊரான திருச்சி அருகே உள்ள லால்குடியில் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க இருவரும் சென்றுள்ளனர்.

ஆனால் அதற்கு முன்பே விக்னேஷ் சிவனின் குலதெய்வமான பாபநாசம் அருகே வழுத்தூர் எனும் கிராமத்தில் உள்ள காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்று இருவரும் பொங்கல் வைத்து வழிபட்டனர். அப்போது, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் வந்ததை கேள்விப்பட்ட கிராம மக்கள் பெருமளவில் கூடத் தொடங்கினர். 

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறை சார்பில் பாதுகாப்பும் போடப்பட்ட நிலையில், வழிபாட்டை முடித்துக் கொண்டு, நெருங்கிய உறவினர்களை சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்து விட்டு, இரவு விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட உள்ளனர். 

முன்னதாக, நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி திருச்சி வரும்போது பெண் ஒருவர் செல்பி எடுக்க விருப்பப்பட்டுள்ளார். ஆனால், அவர் தயங்கியபடி ஒதுங்கி நின்று கொண்டிருந்தாலும், அதனைக் கவனித்த விக்னேஷ் சிவன், அந்த பெண்ணை அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது தற்போது வைரலாகி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்