நேத்ரா சீரியல்: தெலுங்கில் ஒளிப்பரப்பாகும் 'நேத்ரா' சீரியலின் டப்பிங் தான் தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. இச்சாதாரி நாகினியான நேத்ரா நாகமணியை எடுப்பதற்காக பூலோகத்தில் போராட்டங்களை மையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திகில் தொடர் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதியில் இருந்து திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஷிவானி தோமர், பரத்வாஜ் ரங்கவாஜுல்லா, பிரேம் ஜேக்கப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது நேத்ரா சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம்.
நேத்ரா சீரியல் நடிகை, நடிகர்கள்:
உண்மையான பெயர் [Real Name] |
கதாபாத்திரத்தின் பெயர் [Character Name] |
ஷிவானி தோமர் |
நேத்ரா |
பிரேம் ஜேக்கப் |
அர்ஜுன் |
பரத்வாஜ் ரங்கவஜுல்லா |
கரண் |
நேத்ரா சீரியல் முழு விவரம்:
சீரியல் பெயர் |
நேத்ரா |
சேனல் |
சன் டிவி |
ரிலீஸ் தேதி |
4 டிசம்பர் 2022 |
ஒளிப்பரப்பு நேரம் |
10.30 PM - 11.00 PM [20-22 நிமிடங்கள்] |
ஒளிப்பரப்பாகும் நாள் |
திங்கள் முதல் சனி வரை |
இயக்குநர் |
ராம்நாராயண் உரகொண்டா |
தயாரிப்பாளர் |
சித்தார்த் குமார் திவாரி |
எழுத்து |
விஜய் நாகபைரு |
திரைக்கதை |
ஆனந்த் கோராடியா |
ஒளிப்பதிவு |
முரளி மோகன் சேகு |
இசையமைப்பாளர் |
சுஷாந்த் பவார், மனோஜ் ஷர்மா |
தயாரிப்பு நிறுவனம் |
சன் என்டர்டெயின்மென்ட், ஸ்வஸ்திக் ப்ரோடக்ஷன்ஸ் |
ஓடிடி தளம் |
Sun Nxt |
நேத்ரா சீரியலின் கதை..
இச்சாதாரி நாகினியான நேத்ரா, உலக அமைதியை பாதுகாக்கும் சக்திவாய்ந்த நாகமணியை பெற வேண்டும் என்றால், ஒரு மனிதப்பிறவை திருமணம் செய்ய வேண்டும். அதற்காக அர்ஜுனை தனது கணவனாக தேர்ந்தெடுக்கிறாள். இதை பொறுக்காத கரண் என்ற அசுரன் அர்ஜுனை கொன்றுவிடுகிறான். இப்படி நாகமணியை அடைவதற்கான போராட்டம் ஆறு ஜென்மங்களாக தொடர்கிறது. ஒவ்வொரு முறையும் கரண் அர்ஜுனை கொன்று நாகமணியை அடைய முயற்சிக்கிறான். ஆனால் நேத்ரா தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டு அடுத்தடுத்த ஜென்மத்தில் பிறந்து வருகிறாள்.
தற்போது ஏழாவது மற்றும் கடைசி ஜென்மத்தில் உள்ள நேத்ரா, அர்ஜுன், கரண் ஆகிய மூவரும் தங்கள் முன்ஜென்ம நினைவின்றி வாழ்ந்து வருகின்றனர். ஆறு ஜென்மங்களாய் பரம விரோதிகளாக இருந்த அர்ஜுன் மற்றும் கரண் தற்போது உயிர் நண்பர்களாக இருக்கிறார்கள். மேலும், அர்ஜுனின் அலுவலகத்தில் கரணின் தனிப்பட்ட செயலாளராக நேத்ரா பணியாற்றி வருகிறாள். சிவன்கோவிலில் வசித்துவரும் வயதான பாட்டி ஒருவரின் உதவியால் நேத்ரா தன் முன்ஜென்ம நினைவுகளைப் பெற்று மீண்டும் நாகினியாக மாறுகிறாள். கரணின் இடையூறுகளைக் கடந்து அர்ஜுனுடன் இணைந்து நாகமணியை எப்படி பெற்று உலக அமைதியைப் பாதுகாக்க போகிறாள் என்பதே கதைக்களம்.
நேத்ரா சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.
டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னபாக, சன் டிவி வெளியிடும் நேத்ரா சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…