இயக்குநர் வெங்கட் பிரபு மாநாடு படத்தைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு படத்தை இயக்குகிறார். இதனைத் தொடர்ந்து கன்னட நடிகர் கிச்சா சுதீப்புடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை நடிகர் கிச்சா சுதீப்பே வெளியிட்டுள்ளார்.
கிச்சா சுதீப் நடிப்பில் விக்ராந்த் ரோணா திரைப்படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் நாளை உலகம் முழுக்க ரிலீஸாகவுள்ளது. மும்பையில் நடைபெற்ற புரோமோசன் நிகழ்ச்சியில் கிச்சா சுதீப் பல விசயங்கள் குறித்து பேசினார். அதில் வெங்கட் பிரபுவுடன் இணைவது குறித்தும் அவர் பேசியிருக்கிறார். அதற்குள் மேலும் இரண்டு படங்கள் நடித்து முடித்துவிடுவேன் என்றும் அதன் பிறகுதான் வெங்கட் பிரபுவுடன் இணைவேன் எனவும் கூறியுள்ளார். தெலுங்கில் நாக சைத்தன்யாவை இயக்கும் வெங்கட் பிரபு இதனைத் தொடர்ந்து கிச்சா சுதீப்புடன் இணையவுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…