முல்லையின் மருத்துவச் செலவுக்காக வாங்கிய 5 லட்சம் பணத்தை திருப்பி தந்த பிறகே வீட்டுக்கு வருவேன் என ஆதங்கத்துடன் கிளம்பிய கதிர் அவனது மனைவி முல்லை இருவரும் சேர்ந்து புதிதாக ஹோட்டல் ஒன்றை துவங்கி, அதை திறக்கின்றனர். இந்த திறப்பு விழாவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கலந்து கொள்ளும் என கதிர், முல்லை இருவரும் ஆவலோடு காத்திருக்க, கடைசியில் முல்லையின் அம்மாவும் அப்பாவும் மட்டுமே வருகை தருகின்றனர்.
அண்ணன், தம்பி குடும்பம் வராத வருத்தத்தில் கதிர் சோகமாக இருக்கிறான். அந்த நேரத்தில் முல்லையின் அக்கா வந்து இறங்குகிறாள். எப்போது என்ன கிடைக்கும் யாரை விழுங்கலாம் என நினைக்கும் அவளது குணம் தெரிந்தே அமைதி காக்கிறான் கதிர். ஆனால் வந்த வேகத்தில் முல்லையின் அக்கா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை பற்றி தாறுமாறாக பேசுகிறார். அவர்கள் வரமாட்டார்கள் அப்படி இப்படி பேச அது மேலும் வருத்தத்தை தருகிறது. கதிர் வருத்தத்தில் இருப்பதால் எதுவும் பேசாமல் நகர்ந்து விடுகிறார்.
முல்லையின் அக்காவுடன் சேர்ந்து அவளது அம்மாவும் கதிரை குத்திக் காட்ட அது மேலும் சங்கடத்தை தருகிறது.
மறுபுறம் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் கதிர் ஹோட்டலுக்கு போகலாம் என்கிற எண்ணத்துடன் இருந்தாலும், சண்டை காரணமாக போக முடியாத சூழலில் இருக்கிறார்கள். மற்றவர்கள் அப்படியே வீட்டில் இருக்க, அண்ணன் மூர்த்தி மட்டும் கதிர் ஹோட்டலுக்கு வருகிறான்.
ஹோட்டலின் முன் ஒரு இடத்தில் மறைந்து இருந்து ஹோட்டல் திறப்பு விழாவை பார்க்கிறான். அங்கே ஒரு குழந்தையிடம் பணத்தைக் கொடுத்து முதல் போனி செய்யவும் வாழ்த்தவும் செய்கிறான் மூர்த்தி. இதனை அறிந்துகொண்ட கதிர், குறைந்த பணத்துக்கே கூடுதல் உணவுகளை வழங்கி அனுப்புகிறான்.
மூர்த்தியும் அதை மறுக்காமல் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்று கயல் பாப்பா, தனம் உள்ளிட்டோரிடம் பகிர்ந்து சாப்பிடுகிறார்கள். கதிர் நல்லா முன்னேறிடுவான். நல்ல நிலைக்கு வருவான் என வாழ்த்துகின்றனர். என்னதான் சண்டை போட்டு பிரிந்து இருந்தாலும் அவர்களின் பாசம் எப்போதும் குறையாது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டார்கள் கதிரும் மூர்த்தியும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…