இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பல காலம் இதை திரைப்படமாக எடுக்க வேண்டும் என பேசப்பட்ட படங்களில் ஒன்று கல்கியின் வரலாற்று புதினமான பொன்னியின் செல்வன். இந்த கனவு இயக்குனர் மணிரத்னத்திற்குத் தான் நனவாகியுள்ளது. இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். மேலும் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
இந்நிலையில் படத்தின் புரமோஷன் வேலைகளை துவங்கியுள்ள படக்குழு கடந்த சில தினங்களாக முக்கிய கதாப்பாத்திரங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு வந்தது. இதையடுத்து இன்று சென்னை டிரேட் சென்டரில் விழா வைத்து டீசரை வெளியிட்டுள்ளது. நடிகர் சூர்யா படத்தின் டீசரை வெளியிட்டார்.
பொன்னியின் செல்வன் படத்தின் டீசரை பார்க்கும் போதே அதன் பிரமாண்டமும், ஒவ்வொருவரும் அதற்கு போட்ட உழைப்பும் கண்முன்னே தெரிகிறது. சோழர்களின் கனவுலகை கண் முன் நிறுத்தும் பிரமாண்டமாய், பார்ப்பவர்களை புல்லரிக்க செய்துள்ளது பொன்னியின் செல்வன் டீசர் என்றால் அது மிகையில்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…