தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி ஹிந்தியிலும் வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு பெரிய ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. சமீபத்தில் புஷ்பா படத்தில் வரலாற்றையே படைத்தார் போல, பெரும்புகழ் பெற்றார் ராஷ்மிகா.
அதன் பின், நடிகர் விஜய் உடன் நடித்து இருக்கும் வாரிசு படத்திற்கு, விஜய் படம் என்பதை விட, விஜய், ராஷ்மிகா படம் என்பதற்கே அதிக மௌசு இருக்கும். மேலும், சமீபத்தில் வாரிசு திரைப்படத்தில் இருந்து வெளியான ரஞ்சிதமே பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது.
ரசிகர்கள் கொண்டாடி வரும் இந்த பாடலுக்கு வரவேற்பு கிடைத்த போதிலும், சில தரப்பினர்கள் இது குறித்து ட்ரோல் செய்து வருகிறார்கள். மேலும், இந்தப் பாடல் வேற பாடலிலிருந்து காபி என சொல்லியும், சிலர் அந்தப் பாடலுக்கு ராஷ்மிகா, கரகாட்டக்காரன் கோவை சரளா போல இருக்கிறார் எனவும் ட்விட்டரில் ட்ரோல் செய்தனர்.
இந்த ட்ரோல்களுக்கு ராஷ்மிகா பதிலடி கொடுக்கும் விதமாக ட்விட்டரில் பதிவு ஒன்றை செய்துள்ளார்.
அதில், “கடந்த சில தினங்களாக, மாதங்களாக, ஏன் வருடங்களாக கூட எனக்கு ஒரு விஷயம் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. நான் இதைப் பற்றி பல வருடங்களுக்கு முன்னரே பேசி இருக்க வேண்டும். நான் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே, பல்வேறு ட்ரோல்களை சந்தித்து வருகிறேன். நான் என்னை எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை. அதற்காக, உன்னை பிடிக்கவில்லை என நெகட்டிவிட்டியை கூறாதீர்கள்.
நான் உங்களை சந்தோஷப் படுத்தவே, கடினமாக உழைத்து வருகிறேன். உங்களது மகிழ்ச்சி தான் என் மகிழ்ச்சி. நான் சொல்லாத விஷயங்களைக் கூட வைத்து என்னை ட்ரோல் செய்து அசிங்கப்படுத்துவது என மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. இது எல்லாம் கண்டுக்காத என என்னை பலரும் அட்வைஸ் செய்வர். ஆனால், இது எல்லை மீறி போகிறது. ட்ரோல்கள் பற்றி பேசி நான் யாரையும் ஜெயிக்க விரும்பவில்லை.” எனக் கூறினார்.
இத்துடன், “Be kind everyone. We’re all trying to do our best" எனவும் கூறி இருக்கிறார்.
ராஷ்மிகா இந்த பதிவு பார்த்த பிறகாவது, இனி எவரும் ட்ரோல் செய்ய மாட்டார்கள் எனவும் கூறப்பட்டு வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…