பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொள்ள சம்மதித்துள்ள நிலையில், இந்த விழாவுக்கு வேறு யார் யார் வருகை தரவுள்ளார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வரும் செப்டம்பர் 30ம் தேதி ரிலீசாகவுள்ளது. இதனிடையே நாளை செப்டம்பர் 6ம் தேதி மாலை பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது இசை வெளியீட்டு விழா. மேலும் இதே மேடையில் டிரைலர் வெளியீடும் நிகழவுள்ளது.
நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு தமிழ் திரையுலக பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த இசை வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்வதை உறுதி செய்துள்ளனர் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும். பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி, கமல் இருவரும் ஒரே மேடையில் தோன்றவுள்ளதால் அவர்களைக் காண ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…