பாகுபலியின் சாதனையை படம் ரிலீஸாவதற்கு முன்பே துவம்சம் செய்துள்ளது பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸாகவுள்ளது.
500 கோடியில் மிகப் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம், டிரைலர் பார்க்கும்போது நம்மை திருப்தி படுத்தும் என்கிற நம்பிக்கை உருவாக்கியுள்ளது.
பாகுபலி 1 படத்தை 41 கோடிக்கும், பாகுபலி 2 படத்தை 51 கோடிக்கும் பிசினஸ் செய்து சாட்டிலைட் உரிமையை விற்றார்களாம். ஆனால் பொன்னியின் செல்வன் எடுத்த எடுப்பிலேயே 125 கோடிக்கு அமேசான் நிறுவனத்திடம் கொடுத்துள்ளது. அமேசான் பிரைம் நிறுவனம் இந்த படத்தை 2 மாதங்கள் கழித்துதான் ஓடிடியில் வெளியிடும் என்கிற ஒப்பந்தத்தோடு பெற்றிருக்கிறார்கள்.
சன்டிவி சாட்டிலைட் உரிமையை 101 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவுக்கும் ஒரு தொகை பேசப்பட்டிருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். பிசினஸ்ஸில் ராஜமௌலியையே தூக்கி சாப்பிட்ட மணிரத்னம் என கோலிவுட்டில் ஒரே பேச்சு.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…