பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் ஒன்றை வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. லைகா தரப்பிலிருந்து இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி தமிழ்நாடு, இந்தியா, உலகம் முழுக்க மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. 500 கோடி அளவுக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் சுமார் 130 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் சாதனை செய்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடுவதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.
வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இன்றையதினம் மாலை 4 மணி அளவில் இந்த அறிவிப்பை வெளியிட லைகா முடிவு செய்துள்ளது. இதுதான் அப்டேட் என்று தெரிவித்துள்ள டிராக்கர்ஸ், அதனைத் தொடர்ந்து இன்னொரு சர்ப்ரைஸ் அப்டேட் வரவுள்ளதாக கூறுகிறார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…