வணக்கம். இந்த ஆண்டு நம்ம நாடு சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டு. நம்ம நாட்ட வணங்கும் விதமாக, நம்ம எல்லாரையுடைய ஒற்றுமைய காட்டும் விதமாக, நம்ம நாடு சுதந்திரம் அடையறதுக்கு எத்தனையோ வருசங்கள், பல லட்சம் பேர், எத்தனையோ சித்திரவதைகளை, கொடுமைகளை அனுபவிச்சிருக்காங்க.
எத்தனையோ பேர் அவர்கள் உயிரையே தியாகம் பண்ணிருக்காங்க. அந்த சுதந்திர தியாகிகளுக்கு, அந்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வருகிற 15ம் தேதி ஜாதி மத கட்சி வேறுபாடு இல்லாமல் நாம எல்லாரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு ஒரு ரெண்டு அடி, இல்லனா ஒரு மூனு அடி கொம்புல, நம்ம தேசியக் கொடிய கட்டி நம்ம வருங்கால சந்திகளான கொழந்தைகள், இளைஞர்கள் கையால நம்ம வீட்டுக்கு முன்னால அந்த கொடிய பறக்க விட்டு, நாம பெருமை கொள்வோம். நாடு இல்லைனு சொன்னால் நாம இல்ல
நாம எல்லாரும் இந்தியர்கள் என்று பெருமை கொள்வோம். ஜெய்ஹிந்த்
இவ்வாறு அவர் பேசியுள்ளார்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…