Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கன்டென்டுக்காக பேச போய் இப்படி ஆகிப்போச்சே...சர்ச்சையில் BB ராஜு!

Priyanka Hochumin September 10, 2022 & 17:00 [IST]
கன்டென்டுக்காக பேச போய் இப்படி ஆகிப்போச்சே...சர்ச்சையில் BB ராஜு!Representative Image.

பல ஆண்டுகளாக சினிமா துறையில் பணியாற்றி வரும் ராஜு ஜெயமோகன் சமீபத்தில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5 இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. அப்படியாக தற்போது பிபி ஜோடிகள் 2 இல் பிரியங்கா உடன் ஆங்கரிங் செய்து வருகிறார். மேலும் ராஜு வீட்ல பார்ட்டி என்னும் தனி ஷோ இவருக்காக விஜய் டிவி வழங்கியுள்ளது. இப்படி இதனை வருட உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரத்தில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அது என்னவென்றால், நடந்து முடிந்த பிபி ஜோடிகள் 2 பைனல்ஸில் நாகர்ஜுனா, சந்திரமௌலி மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் ரன்பீர் கபூருக்கு ராஜு அவர்கள் சென்னை தமிழ், கோவை தமிழ் மற்றும் மதுரை தமிழில் ஒரு சில டயலாக் சொல்லி கொடுப்பார். அதில் சென்னை தமிழ் கூறுகையில் அது சென்னை மக்களை இழிவுபடுத்தும் வகையில் இருந்ததாக மக்கள் சமூக வலைத்தளங்களில் நெகடிவ் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனையை முடிக்க தனது ட்விட்டர் பக்கத்தில் ராஜு அவர்கள் சென்னை மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்