Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வேட்டையாடு விளையாடு 2 வில் இதுதான் கதையாம்! மாஸ் காட்டும் உலகநாயகன்...!

UDHAYAKUMAR September 09, 2022 & 14:14 [IST]
வேட்டையாடு விளையாடு 2 வில் இதுதான் கதையாம்! மாஸ் காட்டும் உலகநாயகன்...!Representative Image.

வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயமாக உருவாகும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது. இதுகுறித்து எழுத்தாளர், கதையாசிரியர் ஜெயமோகன் கருத்து தெரிவித்துள்ளதை அடுத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

கிளாஸான போலீஸ் ஸ்டோரியான வேட்டையாடு விளையாடு முதல் பாகத்தில் கமல்ஹாசன் தைரியமான போலீஸ் அதிகாரியாக வருவார். முன் பின் என கதை நான் லீனியர் திரைக்கதையில் நகரும். கிட்டத்தட்ட இதே பேட்டர்னில்தான் கதை வரவிருக்கிறது என கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயமோகன் சுவாரஸ்யமான தகவல்கள் ஒன்றை தெரிவித்துள்ளார். 

தைரியமான போலீஸ் அதிகாரியான ராகவன் அந்த சம்பவத்துக்கு பிறகு காவல் துறையிலிருந்து விலகிவிடுகிறார். பின்னர் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் காவல்துறையையே அச்சுறுத்த மீண்டும் பணிக்கு அழைக்கப்படுகிறார் ராகவன். 

வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் இரண்டாம் பாகம், ராகவன், ஆராதனா அவரது மகள் ஆகிய 3 பேருடன் தொடர்ந்து பயணிக்கும். இவர்களது வாழ்க்கையில் நடக்கும் சந்தோஷமான தருணங்கள், காதல், பாசம் என அனைத்தும் ஒரு பக்கம் சென்றுகொண்டிருக்கும். இடையிடையே அதிரடி காட்சிகளும் இண்வெஸ்டிகேசன் காட்சிகளும் நடக்கும். இப்படி மிக சுவாரஸ்யமாக கதையை எழுதியிருக்கிறார்கள்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்