தமிழ் , தெலுங்கு இப்போது ஹிந்தி என பிஸியாக இருக்கும் ராஷ்மிகா ஓவர் சீன் போட்டாலும் சம்பள விசயத்தில் கறாராக இருக்கிறாராம். நேஷனல் கிரஷ் என தனக்குத் தானே பிஆர் வைத்து பிரமோட் செய்யும் இவருக்கு இத்தனை கோடி சம்பளமா என கோலிவுட்டே வாயைப் பிளக்கிறது.
சுய விளம்பரம், ஓவர் சீன், அலட்டல் கேஸ் என இணையதளங்களில் ராஷ்மிகாவை ஓவராகவே டீஸிங் செய்வார்கள். அவர் அப்படித்தான் செய்கிறார் என்றாலும் காசு விசயத்தில் கரெக்ட்டாக இருக்கிறார். சினிமாவில் நடிக்கத் தொடங்கிய சில வருடங்களிலேயே தன்னுடைய நிலையை அறிந்து கோடிகளில் சம்பளத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறார்.
தளபதி விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடிக்க அவருக்கு 4 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. இதிலும் அம்மணிக்கு வருத்தம்தானாம். காரணம் தன் மார்க்கெட் வேல்யூ தற்போது 5 கோடி, தளபதி மாதிரியான மிகப் பெரிய படத்தில் நடிக்கும்போது தனக்கும் அதற்கு நிகரான சம்பளம் தந்திருக்க வேண்டும் என நினைக்கிறாராம். ஆனால் இந்த படத்துக்கு முன்னரே ஒப்பந்தம் ஆகிவிட்டதால், ஹிந்திக்கு போன பிறகு ஏறிய மார்க்கெட் வேல்யூவுக்கு இவருக்கு சம்பளம் பேசப்படவில்லை. ஆனால் அடுத்த பட தயாரிப்பாளருக்குத் தான் ஷாக்.
இவர் அடுத்ததாக நடிக்கவுள்ள தெலுங்கு படத்துக்கு 7 கோடி சம்பளம் கேட்கலாம் என நினைத்திருக்கிறாராம். ஒருவேளை வாரிசு பயங்கர ஹிட் ஆகி, ஹிந்தி படமும் வேற லெவலுக்கு வசூலாகி, தெலுங்கில் புஷ்பா படமும் இவருக்கு கைக் கொடுத்தால் அம்மணி நேரடியாக 9, 10 கோடிக்கு தாவி விடலாம் என நினைக்கிறாராம்.
நயன்தாரா, சில பாலிவுட் நடிகைகள் போல இவரும் பந்தா பண்ணி ஓவராக அலட்டல் செய்கிறார் என்று புகார் எழுந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…