இந்தியன் 2 திரைப்படத்தைத் தொடர்ந்து சபாஷ் நாயுடு படத்தைத் துவங்க கமல்ஹாசனிடம் லைகா நிறுவனம் ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன், ரம்யா கிருஷ்ணன், ஷ்ருதி ஹாசன், சவுரப் சுக்லா, பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடிக்க, தசாவதாரம் கதாபாத்திரமான பல்ராம் நாயுடுவை மீண்டும் திரையில் கொண்டுவர திட்டமிட்டிருந்தது லைகா நிறுவனம்.
லைகாவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்புதல் பெறப்பட்டு படத்துக்கான சம்பளங்களும் கொடுக்கப்பட்டு வந்தது. கமல்ஹாசன் இயக்கம் மற்றும் நடிப்பு எனவும், இளையராஜா இசையில் சூப்பரான காமெடித் திரைப்படமாக உருவாகும் எனவும் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்நிலையில்தான், கமல்ஹாசனுக்கு காலில் அடிபட்டு பிரச்னையாக இந்த படம் கிடப்பில் போடப்பட்டது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியடையவே, கமல்ஹாசனை வைத்து நின்று போன சபாஷ் நாயுடு படத்தை முடிக்க லைகா முடிவு செய்துள்ளது. இந்தியன் 2 படத்துக்குப் பிறகு தொடர்ச்சியாக அடுத்த படத்துக்கும் கால்ஷீட் கேட்டுள்ளதாம் லைகா.
கமல்ஹாசன் - மகேஷ் நாராயணன் கூட்டணியில் உருவாகும் ஒரு படம் இடையில் இருப்பதால், கமல்ஹாசன் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது தெரியவில்லை. காரணம் 5, 6 வருடங்களுக்கு முன்னரே வாங்கிய பணம் இப்போது வட்டியுடன் பெரிய தொகையாக நிற்கும். அதைத் திருப்பி கொடுப்பதற்கு பதில் தன்னுடைய சம்பளம் இப்படி உயர்ந்துவிட்டது, நானே இயக்குநர் என கூறி அதிக சம்பளம் பெறுவதுதான் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…