சந்திரமுகி திரைப்படத்தில் வேட்டையன் மற்றும் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரஜினிகாந்த். அவரையும் ஓவர் டேக் செய்து பெயர் வாங்கியது சந்திரமுகி கதாபாத்திரம். சந்திரமுகி கதாபாத்திரத்தில் ஜோதிகா அதுவரை இல்லாத பர்ஃபாமன்ஸ் செய்து தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். அவருக்கு அந்த படத்தில் நல்ல பெயர் கிடைத்தது.
இந்நிலையில், சந்திரமுகி 2 படத்தில் யார் நடிக்கவுள்ளார் என்கிற கேள்வியுடன் ஜோதிகா அளவுக்கு யாரால் நன்றாக நடிக்கமுடியும் என்கிற துணைக்கேள்வியும் எழுந்துள்ளது.
ஜோதிகாவிடமே இந்த கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டும், அவர் சம்மதிக்காத நிலையில் த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். த்ரிஷாதான் சந்திரமுகியாக நடிக்கவுள்ளார் என பேச்சு எழுந்தது. ஆனால் இப்போது அவரும் இல்லையாம். சந்திரமுகி 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில்தான், இந்த படத்தில் சந்திரமுகியாக நடிக்கவிருப்பது சாய்பல்லவி என அரசல் புரசலாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் பி. வாசு, நடிகை சாய் பல்லவியிடம் முழு கதையையும் கூறியுள்ளாரம். அவருக்கும் கதை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கதையில் மிகவும் ஆர்வமாக இருப்பதாக தெரிவதால் சாய் பல்லவி நிச்சயமாக சந்திரமுகியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…