தன்னால் படத்தின் பணிகள் பாதிக்கக்கூடாது என வருத்தப்படும் சமந்தா, தான் ஒப்பந்தமாகியிருக்கும் படங்களிலிருந்து தாமாகவே விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கிறவர் நடிகை சமந்தா. இவர் அறிமுக படத்திலிருந்தே கொடிகட்டி பறந்தவர். சில முக அழகு சிகிச்சைகளின் பின்விளைவுகளால் பாதிக்கப்பட்டவர், அதிலிருந்து மீண்டு படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
தமிழில் விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், நானி, வெங்கடேஷ், மகேஷ்பாபு, பவன் கல்யாண், நாகர்ஜூனா, அல்லு அர்ஜூன், ராம் சரண், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சமந்தா.
இப்போது சாகுந்தலம், குஷி, ஆராத்யா உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இன்னும் சில படங்களிலும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் தனது உடல் நலன் படங்களில் நடிக்க ஒத்துழைக்கவில்லை என்றும், இதன்பிறகு படங்களில் நடித்தாலும் அது தன்னால் படப்பிடிப்பு தாமதமாகும் நிலைக்கு தள்ளப்படும் என்றும் வருத்தத்தில் இருக்கும் சமந்தா, இனிமேல் நடிக்கப் போவதில்லை என முடிவெடுத்திருக்கிறாராம்.
வெகு சீக்கிரம் தனது உடல்நிலை சரியாகி அடுத்தடுத்து படங்களில் நடிக்கவேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். நல்ல உடல்நலனை இயற்கை அவருக்கு அளிக்கட்டும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…