பிரபல சீரியல் நடிகை துனிஷா சர்மா படப்பிடிப்பு தளத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தற்கொலைக்கு காரணம் என சக நடிகரை கைது செய்து விசாரித்து வருகின்றது காவல்துறை.
மகராஷ்டிராவில் பிரபல சீரியலில் நடித்து வரும் துனிஷா, மேக்கப் அறையில் இருக்கும் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என அம்மாநில போலீஸ் தகவல்.
5 மணி நேரங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை. அதில் அவர் மேக்கப் போடும் வீடியோ இடம் பெற்றுள்ளது. சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த தற்கொலை நடந்துள்ளது. சில மணி நேரங்களிலேயே நடிகர் ஷீசன் முகமது கான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…