சோனியா அகர்வாலை விவாகரத்து செய்துவிட்டு கடந்த 2011ம் ஆண்டு கீதாஞ்சலியைத் திருமணம் செய்து கொண்ட இயக்குநர் செல்வராகவன், தற்போது போட்டுள்ள டிவீட்டால் பலரும் பலவாறு பேசி வருகின்றனர். உண்மையில் என்ன விசயம் என்பதை அறிய முயற்சித்தோம்.
செல்வராகவன் அவரது தந்தை கஸ்தூரி ராஜாவைப் போலவே தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் இயக்குநராவார். இவரது இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்தும் மிகப் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டும், விமர்சிக்கப்பட்டும் இருக்கும். சமீபத்தில் அவரது தம்பி தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தில் நடித்து இயக்கியிருந்தார் செல்வராகவன்.
முன்னாள் மனைவியான சோனியா அகர்வாலை பிரிந்து கீதாஞ்சலி என்பவருடன் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தவர் டிவிட்டரில் ஒரு விசயத்தைக் கூறியுள்ளார். அதில், தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும் என்று கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
செல்வராகவன் தனது மனைவியைப் பிரிகிறார் எனும் அளவுக்கு இதை யாரோ எழுதிவிட்டார்கள். ஆனால் உண்மையில் இதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்கிறார்கள் செல்வராகவனுக்கு நெருக்கமானோர். இருவரும் நல்ல புரிதலோட தங்கள் வாழ்க்கையைப் பயணித்து வருகின்றனர் என்கிறார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…