யாரடி நீ மோகினி சீரியலில் நடித்து வருபவர் நடிகை ஸ்ரீநிதி. இவர் தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் அனுப்பியுள்ள மீம் ஒன்றுக்கு பதிலளித்துள்ளார். அதில் சிம்புவை கட்டிக்க தயார் எனும் தொணியில் பதிலளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுள் சிம்புவும் ஒருவர். பல சர்ச்சைகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு மாநாடு திரைப்படத்தின் மூலம் மாஸ் கம்பேக் கொடுத்தார். மாநாடு படத்தின் மூலம் சிம்புவின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்தது. இந்நிலையில், தற்போது பத்து தல, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். விரைவில் இந்த படங்கள் திரைக்கு வர இருக்கிறது.
39 வயதாகியும் சிம்பு இதுவரை திருமணம் செய்துகொள்ள வில்லை என்பதால் அவரது ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டாகித்தான் இருக்கிறார்கள். அவ்வப்போது காதல், திருமணம் குறித்த பேச்சு எழுந்தாலும் சிம்புவுக்கு திருமணம் குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் ரசிகர் ஒருவர் ஸ்ரீநிதியின் இன்ஸ்டாவில் கேட்டுள்ள சிம்பு குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.
பேசாம நீங்க ரெண்டு பேரும் ஏன் கல்யாணம் பண்ணிக்க கூடாது என துப்பாக்கி மீமை பகிர்ந்துள்ளார் ரசிகர். அதற்கு பதிலளித்துள்ள ஸ்ரீநிதி, நல்லாதான் இருக்கும். ஆனா எனக்கு இப்போ ஆள் இருக்குதே என பதிலளித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…