கடந்த 9 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியனதால் ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் உள்ளனர். இன்று அதிகாலை 1 மணிக்கு அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம், அதிகாலை 4 மணிக்கு விஜய் நடித்த வாரிசு திரைப்படம் முதல் காட்சி திரையிடப்பட்டது. இதனால் நேற்றிரவு 9 மணியில் இருந்தே தியேட்டர்கள் முன்பு விஜய், அஜித் ரசிகர்கள் குவிய ஆரம்பித்தனர்.
விஜய், அஜித் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது, பட்டாசு வெடிப்பது, கச்சேரி, டிஜே பார்ட்டி, பைக் வீலிங் என பலவகையான சாகசங்களில் இருதரப்பு ரசிகர்களும் இரவு முதலே ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு சாகசத்தில் ஈடுபட்ட அஜித் ரசிகர்கள் ஒருவர் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சென்னை ரோகிணி திரையரங்கில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தைக் காண சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவை சேர்ந்த பரத்குமார் என்ற 19 வயது இளைஞர் நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டத்தில் ரசிகர்களுடன் ஈடுபட்ட பரத்குமார், அங்கே மெதுவாக சென்று கொண்டிருந்த ட்ரெய்லர் லாரி மீது நடனம் ஆடியுள்ளார்.
பின்னர் அதில் இருந்து இறங்குவதற்காக கீழே குதித்த பரத்குமாரிக்கு முதுகில் பலமான அடி விழுந்துள்ளது. இதனால் முதுகு தண்டில் படுகாயம் அடைந்த பரத்குமார் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அஜித் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…