சென்னை ரோகினி திரையரங்கில் அஜித், விஜய் படங்கள் 9 வருடங்களுக்கு பிறகு இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு துணிவு படமும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு படமும் என அடுத்தடுத்து வெளியானதால் தியேட்டரில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் குவிந்திருந்தனர்.
இதனால் ரோகினி திரையரங்கம் அமைந்துள்ள சாலையின் இருபுறங்களிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட வரிசையில் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டி நிலை ஏற்பட்டது.
அதுமட்டுமில்லாமல் வாரிசு படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய நிலையில் அதற்காக காத்திருந்த ரசிகர்களின் கூட்டத்தால் திரையரங்கின் கண்ணாடியாலான நுழைவு வாயில் உடைந்து நொறுங்கிப் போனது.
இவ்வாறு ஆரவாரத்துடன் இருவரின் படங்களும் வெளியான நிலையில் ரோகிணி திரையரங்கில் பரபரப்பு சூழலே நிலவுகிறது. கட்டுக்கடங்காத ரசிகர் கூட்டத்தை கட்டுப்படுத்த காவலர்கள் முற்பட்டபோது இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு ஆனது.
திரையரங்கிற்குள் அதிகளவில் ரசிகர்கள் உட்புகுந்ததால் அவர்களை காவலர்கள் அப்புறப்படுத்தினர் அப்போது கோபமடைந்த ரசிகர்கள் கற்கள், கட்டைகளை திரையரங்க முகப்பு கண்ணாடியில் வீசி ரகளையில் ஈடுபட்டனர்.
இதனால் திரையரங்கமே பரபரப்பாக காணப்பட்டது. ஒரே நேரத்தில் இரண்டு முன்னணி ரசிகர்கள் படங்கள் வெளியானதே இதுபோன்ற பிரச்சனைகளுக்கு காரணம் என கூறப்படுகிறது.
? @RohiniSilverScr pic.twitter.com/Vr1q8hfBO7
— Karthik Ravivarma (@Karthikravivarm) January 10, 2023
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…