அஜித்துக்கு ஒரு வாலி, விஜய்க்கு ஒரு குஷி என அடுத்தடுத்த இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்தவர், திடீரென காணாமல் போக, அவரே நடித்து சில படங்களும் இடையில் வந்திருந்தன. நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தாலே அவரே கதாநாயகனாக சில படங்களில் நடித்தார்.
புது ஹீரோயின் நடிகை, ஏ ஆர் ரஹ்மான் இசை என பிரம்மாண்டமாக தனது படங்களை அறிமுகப் படுத்தியும்கூட அடுத்தடுத்து தனது மார்க்கெட்டை நிலைநிறுத்த முடியாமல் தவித்தார் எஸ் ஜே சூர்யா. அதைத் தொடர்ந்து அவருக்கு கிடைத்ததுதான் வில்லன் கதாபாத்திரங்கள். இம்முறை வில்லனாக வெறித்தனமாக நடித்து தனக்கு ரசிகர்களை உருவாக்கிக் கொண்டார். எஸ்ஜே சூர்யா இருந்தால் படம் ஹிட் என்றே பேசப்பட்டது. ஹீரோக்களையும் தாண்டி எஸ் ஜே சூர்யாவின் முகம் வெளி உலகத்துக்கு தெரிந்தது. முக்கியமாக மாநாடு திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.
இந்நிலையில்தான் தயாரிப்பாளர் ஒருவர் எஸ் ஜே சூர்யாவிடம் ஒரு கோடி ரூபாய் பணத்தை கொடுத்து வைத்திருக்கிறார். இருவரும் சேர்ந்து படம் தயாரித்து பிசினஸ் செய்யலாம் என கேட்க, அந்த சமயத்தில் சரி என ஒத்துக்கொண்டுள்ளார் சூர்யா. பின்னர் தனக்கு அடுத்தடுத்து படங்கள் புக் ஆக, கமிட்மெண்ட் காரணமாக படம் தயாரிக்க வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார். இதனால் அந்த தயாரிப்பாளர் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்க செல்ல, அவரோ அட நம்ம பணம் உங்ககிட்ட இருந்தா என்ன என்கிட்ட இருந்தா என்ன என்று டயலாக் பேசி அனுப்பி வைத்திருக்கிறார். சரி அவரும் தேவைப்படும்போது கேட்பார் போல என நினைத்து தனது திரைப்பயணத்தில் கவனம் செலுத்திருக்கிறார்.
ஆனால் எஸ் ஜே சூர்யாவின் கிராஃப் மேல் நோக்கி செல்லவே காத்திருந்த தயாரிப்பாளர் கொடுத்த பணத்தை திருப்பி கேட்க, இந்தாங்க 1 கோடி ரூபாய் என எஸ் ஜே சூர்யாவும் திருப்பி கொடுக்க அங்குதான் டுவிஸ்ட். என்னது ஒரு கோடி ரூபாய் திருப்பி குடுக்குறீங்க. 8 வருசத்துக்கும் சேர்த்து வட்டியோட குடுங்கனு சொல்ல, ஷாக்கிங் உச்சத்துக்கே சென்றுவிட்டார் எஸ் ஜே சூர்யா.
ரெட் கார்டோ, வாழ்நாள் தடையோ முடிஞ்சத பாத்துக்கோ நா டீக்கடை வச்சி பொழப்பு நடத்திக்குறேன். 1 கோடி ரூபாய்க்கு மேல ஒரு பைசா தரமுடியாது என்று கூறியுள்ளார் எஸ் ஜே சூர்யா.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…