ஜெயிலர் படத்தின் வேற லெவல் அப்டேட் ஒன்று இன்று வெளியாகியுள்ளது.
இயக்குனர் நெல்சன் பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் என்ற படத்தை இயக்குகிறார். இது ரஜினிகாந்தின் 169வது படமாகும்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கடந்த சில தினங்களுக்கு முன் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
இன்று காலை சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயிலர் படத்தில் அப்டேட் 11 மணிக்கு வெளியிடப்படும் எனக் கூறியிருந்தது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
இந்நிலையில், 11 மணிக்கு சன் பிக்சர்ஸ் ரஜினியின் புகைப்படத்துடன் ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதை அறிவித்துள்ளது. ராயப்பேட்டையில் காவல் நிலைய செட் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
#Jailer begins his action Today!@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/6eTq1YKPPA
— Sun Pictures (@sunpictures) August 22, 2022
மேலும், படையப்பா படத்திற்கு பிறகு, இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…