சூர்யா 42 படத்தின் வேலைகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என்று அறிவிப்பு வந்த நிலையில், கொரோனா காரணமாக அதற்கான பணிகள் துவங்காமல் இருந்தது.
இந்நிலையில் தற்போது பூஜையுடன் இதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 42 என பெயரிடப்பட்டுள்ளது. பட பூஜையில் சூர்யா, சிவா, மோகன்லால், இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சூர்யா 42 படம் மூலம் பிரபல பாலிவுட் நடிகையான திஷா பதானி கோலிவுட்டில் களமிறங்குகிறார். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு சூர்யாவுடன் சேர்ந்து விளம்பர படம் ஒன்றில் நடித்துள்ள நிலையில், தற்போது அவருக்கு ஹீரோயினாகியுள்ளார்.
தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே சூர்யாவின் மாயாவி, சிங்கம், சிங்கம் 2, ஆறு ஆகிய படங்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சூர்யா 42 பான் இந்திய படமாக உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…