திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யா சுப்ரபாத சேவையில் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யா நேற்று இரவு திருமலைக்கு சென்றடைந்தனர். திருமலையில் உள்ள டி.எஸ் ஆர் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார்.
இதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து கோயில் மகா துவாரம் முன்பு ரஜினியை தேவதாஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசீர்வாதம் செய்து வைத்தனர். இதனை அடுத்து செய்தியாளரிடம் பேசிய ரஜினிகாந்த், 6 வருஷம் கழிச்சு ஏழுமலையானை தரிசனம் செய்தது திவ்ய அனுபவமா இருந்தது என்றும், அமைச்சராக பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி, உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் எனக்கூறினார்.
#Rajinikanth | #Tirupati | #Jailer
— Satheesh (@Satheesh_2017) December 14, 2022
Thalaivar Latest Video ??❤️
திருப்பதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! pic.twitter.com/VGqjNKxVdz
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…