சூர்யா, துல்கர் சல்மான், பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் இவர்கள் அனைவரும் ஒரு படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அந்த படம் திரைக்கு வந்தால், அதுதான் ரியல் பான் இந்திய படம். இந்தியாவின் எல்லா மூலைகளிலும் இந்த படம் கொண்டாடப்படும்தானே..
பிரபாஸ் நடிக்கும் புதிய படங்களில் ஒன்றுதான் புராஜக்ட் கே. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். இவர்களுடன் அமிதாப் பச்சனும், மலையாள நடிகர் துல்கர் சல்மானும் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில்தான், இந்த படத்தில் நடிக்க சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில், சூர்யா இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதாக முதலில் கூறப்பட்டாலும் அது ஒரு பெரிய போர்சனாகவே இருக்கும் எனவும், அநேகமாக குற்றங்களைக் கண்டறியும் அதிகாரியாக நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, இதுபோன்ற படங்களில் விஜய் சேதுபதிதான் நடித்து வந்தார். இப்போது சூர்யாவையும் அடுத்தடுத்த படங்களில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க முயற்சி நடக்கிறது. ஆனால் சூர்யா ஒப்புக்கொள்வாரா என்பது தெரியவில்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…