சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளிடையே காதல் ஏற்பட்டு அவர்கள் திருமணம் செய்துகொள்வது சமீப காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்தவகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பிரிட்டோ. இதற்கு முன்பு இவர் தவமாய் தவமிருந்து என்கிற சீரியலில் சந்தியா ராமச்சந்திரனுக்கு ஜோடியாக நடித்து வந்தார். அதில் பிரிட்டோ பாண்டியாகவும், சந்தியா மலர் என்கிற கதாபாத்திரத்திலும் நடித்து வந்தனர். அந்த சீரியலில் இவர்களது கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகி இருந்ததால், ரசிகர்கள் மத்தியில் இருவரும் பிரபலம் ஆகினர்.
அந்த சீரியலில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு, தற்போது இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணத்துக்கும் தயாராகி உள்ளனர். அதன்படி கடந்த ஜனவரி 25ந் தேதி பிரிட்டோ - சந்தியா ராமச்சந்திரன் ஜோடிக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. இந்த நிச்சயதார்த்ததில் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டனர். தற்போது நிச்சயதார்த்தத்தின் போது ஜோடியாக எடுத்த புகைப்படத்தை இருவரும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளனர். இதைப் பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…