பலரின் சூழ்ச்சியாலும், எதிர்பார்ப்புகளாலும் பிணைக்கப்பட்ட காவியா வேற வழியில்லாமல் பார்த்தியை விட்டு விலக விடறது கேட்டு நீதிமன்றத்திற்கு செல்கிறாள். நீதிபதி இருவரிடமும் விவாகரத்து குறித்த காரணத்தை கேட்கும் போது எதுவும் சொல்லாமல் மௌனம் காத்தனர். எனவே, விவாகரத்திற்கான காரணம் சரியாக இல்லாததால் நீதிமன்றம் அடுத்த ஆறு மாதங்களுக்கு இவர்களை ஒன்றாக வாழவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பு குடும்பத்தில் பாதி பேருக்கு மகிழ்ச்சியாகவும், பாதி பேருக்கு அதிர்ச்சியாகவும் இருந்தது.
இருப்பினும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காவ்யாவை வீட்டை விட்டு வெளியேற்ற தேவி, பார்வதி முயற்சிக்கின்றனர். ஆனால் அருணாச்சலம் இந்த ஆறு மாதத்திற்குள் காவ்யா மனம் மாறுவாள் என்ற நம்பிக்கையில் அதனை ஏற்க மறுக்கிறார். இதில் முக்கியமான ஒன்று பார்த்தி காவ்யாவை அடியோட வெறுக்க ஆரம்பித்துவிட்டார். வீட்டிற்கு வந்த பார்த்திபன் தன்னுடைய அறையில் பித்து பிடித்தது போல அனைத்து பொருட்களையும் அடித்து உடைக்கிறான்.
பின்பு அறைக்கு வந்த காவ்யா பார்த்திபனிடம் பேச முயற்சிக்கும் போது அவன் எரிச்சலில் கத்துகிறான். இனி நீ என்னுடைய மனைவியும் கிடையாது, நான் உன்னுடைய கணவனும் கிடையாது. இனிமேல் என்னுடைய முகத்தில் முளிக்கவே முளிக்காத என்று சொல்லிவிட்டு அழுதுக்கொண்டே சென்றுவிடுகிறான். பிறகு காவ்யா என்ன செய்வது என்று தெரியாமல் கதறி கதறி அழுகிறாள். இதனை பார்க்கும் பார்வையாளர்களுக்கு தன்னை மறந்து கண்ணீர் வரும் படி எதார்த்த நடிப்பில் அனைவரையும் கவலைப் பட வைக்கின்றனர். அடுத்து பார்வதி என்ன செய்யப்போகிறாள், தேவியின் சூழ்ச்சி வலையில் காவ்யா சிக்குவாளா அல்லது அனைத்து உண்மைகளையும் சொல்லி பார்த்திபனுடன் சேருவாளா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…