பாக்கியலட்சுமி சீரியலில் தொடரும் விறுவிறுப்பான திருப்பங்கள். கோபியின் அட்டூழியத்தால் வாழ்க்கையை தொலைக்கப்போகும் எழில். இதில் இருந்து தன்னுடைய மகன் எழிலின் வாழ்க்கையை காப்பாற்றுவாளா பாக்கிய தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
கோபியின் கதாபாத்திரம் சிறிது நேரம் நகைச்சுவையாகவும், சிறிது நேரம் கோபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பதற்கு சிறந்த உதாரணம் கடந்த சில நாட்களாக நடைபெறும் சம்பவங்களில் தெரிகிறது. கோபிக்கு வீட்டின் மதிப்பில் தர வேண்டிய பணத்தை எழில் தருவதாக வாக்களித்து இருக்கிறான். ஆனால் அவனால் பணத்தை புரட்ட முடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட செழியன் மற்றும் ஈஸ்வரி வர்ஷாவை எழிலுக்கு திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துகின்றனர்.
தன்னுடைய குடும்பத்திற்கு எந்த சங்கடமும் ஏற்படுத்த கூடாதா என்று விருப்பம் இல்லாமல் ஒப்புக்கொள்கிறான் எழில். இருப்பினும் தன்னுடைய மகனின் வாழ்க்கை தன்னுடையது போல ஆகிவிடக்கூடாது என்று முயற்சிக்கும் பாகியவை ஈஸ்வரி அதற்றி வைக்கிறாள். தனக்கு திருமணம் என்னும் தகவலை அமிர்தாவிடம் தெரிவிக்க முயலும் எழிலுக்கு அவரின் முகத்தைப் பார்த்தவுடன் எதுவும் கூற முடியவில்லை.
அந்த பக்கம் எழிலுக்கு விறுவிறுப்பாக திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இந்தப் பக்கம் அமிர்தா எழிலைப் பற்றிய கவலையில் அவனைத் தேடி இங்கு வருகிறார்கள். வந்த இடத்தில் எழிலின் திருமண ஏற்பாடுகளைப் பார்த்து அழுதுக் கொண்டே செல்கிறாள். இவர்களின் காதலை பாக்கியா ஒன்று சேர்த்துவாளா அல்லது எழிலுக்கு வர்ஷாவுடன் திருமணம் நடைபெறுமா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…