சின்ன வயதிலிருந்தே சினிமா மீது மோகம் கொண்டு அதில் கைதேர்ந்த கலைஞனாக ஆகிவிட வேண்டும் என ஆசைப் படும் கதாநாயகன். அதற்காக என்ன என்ன செய்கிறார் என்பதுதான் கதை.
படத்தின் கதைக்களம் 1952ல் ஆரம்பிக்கிறது. கதாநாயகன் பெயர் சாமி ஃபேபல்மேன். சிறு வயதில் இவரை இவரது பெற்றோர் சினிமாவுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அதுதான் அவர் தன் வாழ்க்கையில் பார்க்கின்ற முதல் படம். படத்தின் முக்கியமான காட்சியில் அதிவேகமாக வரும் ரயில் அங்கு ரயில்வே கிராஸிங்கில் மாட்டிக் கொண்ட காரை அடித்து தூக்கி எறிவது போன்ற ஸ்டண்ட் சீக்குவன்ஸை பார்த்து மிகவும் பரவசமடைகிறார்.
இந்த சீன் எப்படி உருவாக்கியிருப்பாங்க என யோசிக்க ஆரம்பித்து சினிமா மீது காதலை வளர்த்துக் கொள்கிறார். முதல் முறை படத்துக்கு சென்றவரை அப்பாவும் அம்மாவும் படம் எப்படி இருக்கு? இந்த ஃபீல் எப்படி இருக்கு என கேட்கிறார்கள். அதற்கு அவரிடம் பதில் இல்லை வாயடைத்துப் போய்விட்டார் கதாநாயகன்.
ஆனால் வீடு போய் சேர்ந்ததும் தனக்கு பொம்மை காரும் டிரெய்னும் வேணும் என அடம்பிடிக்கிறார். அந்த காட்சியை தான் மீண்டும் உருவாக்கப்போவதாக கூறுகிறார். அப்பாவுடைய கேமரா ஒன்றில் இதை படம்பிடிக்க திட்டமிடுகின்றனர். இப்படியாக சினிமாவை கற்றுக் கொள்ள முயற்சிக்கிறார் ஹீரோ.
அப்பாவுக்கு நியூஜெர்ஸியிலிருந்து அரிசோனாவுக்கு பணி இட மாறுதல் கிடைக்கிறது. இதனிடையே கதையிலும் மாற்றம் நிகழ்கிறது. சிறுவனான ஹீரோ இளைஞனாக மாறுகிறார். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி ஷார்ட் பிலிம்ஸ் எடுக்கிறார். தன் சினிமா கனவை நினைவாக்க மீண்டும் மீண்டும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இப்படி மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தேடித் தந்ததா? அவர் சினிமா உலகில் நல்ல பெயரை எடுத்தாரா? தான் கொண்ட லட்சியக் கனவை ஜெயித்தாரா என்பதுதான் படத்தின் கதை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…