ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் வெளியானது. அதிகாலை 1 மணிக்கே படத்தை திரையிட்டுள்ள நிலையிலும் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து உற்சாகம் மிகுந்து காணப்படுகின்றனர்.
தனியார் வங்கிகளின் உண்மை முகத்தை தோலூரித்து காட்டியுள்ளதாக துணிவு படத்திற்கு தாறுமாறு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சரி, முதலில் கதை என்ன என்பதை பார்க்கலாம்...
சென்னையில் இயங்கி வரும் பிரபலமான தனியார் வங்கியை ஒரு கொள்ளை கும்பல் கொள்ளையிட திட்டமிடுகிறது. துப்பாக்கியுடன் உள்ளே நுழையும் கும்பல், அங்குள்ள ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் பணயக்கைதியாக வைத்துக்கொண்டு, பணத்தை கொள்ளையடிக்கிறது. அங்கு வாடிக்கையாளர் வேடத்தில் இருக்கும் அஜித், கொள்ளை கும்பலை சுட்டு வீழ்த்துகிறார். ஆனால் அரசாங்கமும், காவல்துறையும் அஜித்தை சுட்டுக்கொள்ள திட்டமிடுகிறது. அவர்களிடம் அஜித் சிக்கினாரா? அஜித் கொள்ளையடிக்க திட்டமிட்டாரா? அதற்கான காரணம் என்ன? என்ற விறுவிறுப்பான காட்சிகளுடன் படம் நகர்கிறது.
மிகப் பெரிய வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கும் அஜித்குமார், நேரடியாக விஜய்யுடன் மோத தயாரான படம் துணிவு. கண்டென்ட் மீதுள்ள நம்பிக்கையால் நேருக்கு நேர் மோதி ஜெயிக்க முடியும் என்கிற நம்பிக்கை இருப்பதனால்தான் இந்த படத்தை ஒரேநாளில் ரிலீஸ் செய்ய சம்மதித்திருக்கிறார்.
நிச்சயம் வாரிசு படத்தை விட துணிவு கதை சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. படத்தை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ஆரம்பம் முதலே டிவிட்டரில் டிவீட் செய்து இதனை அறிவித்து வருகின்றனர்.
அஜித்குமாரின் அறிமுக காட்சியில் விசில் சத்தம் காதைப் பிளக்க ஒரு சில நிமிடங்களுக்கு காதில் எந்த வசனமும் விழாமலே இருக்கிறது.
ரசிகர்களுக்கான படம் முதல் பாதி என இயக்குநர் ஹெச் வினோத் சொன்ன மாதிரியேதான் துவங்கியிருக்கிறது. படம் துவங்கி சில நிமிடங்களிலேயே அமர்க்களமான காட்சிகளால் ரசிகர்கள் உற்சாகத்திலேயே மிதந்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…