Thendral Vanthu Ennai Thodum Today Episode: குலதெய்வம் கோவிலுக்கு போகணும்னு அபி வெற்றியை கூட்டிட்டு வந்து அவங்களுக்கு முதல் இரவு ஏற்பாடு செய்றாங்க. இதுல வேற பரமாவோட ஆளுங்க ஜட்ஜ் சங்கரநாராயணனை கொலை செய்ய வராங்க.
வீட்டு மாப்பிள்ளை என்கிற கெத்த காமிக்க வெற்றி இல்லாத சீன் போட்டுட்டு இருக்காரு. முதல் இரவு ஏற்பாடு பன்னிட்டு ரெண்டு பேத்தையும் அவங்க ரூம்க்கு அனுப்பி வைக்கிறாங்க. அங்க வந்து அபி வெற்றி கிட்ட ரொம்ப பண்றடா நீ, எங்க அப்பா பாவம் இனிமே இப்படி ஏதாச்சும் பண்ண அவ்ளோ தான் சொல்லிட்டேன்னு மிரட்டிட்டு போறா. அப்புறம் ரெண்டு பெரும் தூங்குறாங்க.
திடீர்னு ஏதோ சத்தம் கேட்க வெற்றி போய் பாத்தா கத்தியோடு ஆளுங்க வராங்க. அவங்க கிட்ட சண்டை போட்டு எப்படியோ துரத்துறான். சத்தம் கேட்டு வந்த அபி வீட்டு ஆளுங்க கிட்ட என்னமோ கம்பி கற்ற கதை எல்லாம் சொல்லி ஏமாத்துறான் வெற்றி. சரி வாங்க எல்லாம் தூங்க போலாம்னு கெளம்புறப்ப போலீஸ் கார் வந்து நிக்கிது. கல்யாண வீட்ல திருட பாத்தானு ஒருத்தனை அரெஸ்ட் பண்ணிருக்காங்க.
அவனை ரிமாண்ட்ல வைக்க ஜட்ஜ் கிட்ட சைன் வாங்க வந்த போலீஸ் ரொம்ப அவசர படுத்துறாரு. ஆனா வெற்றி அதை தடுத்து போலீஸ் சொல்றத மட்டும் வச்சி அவனை இப்ப ரிமாண்ட்ல வச்சி ஜெயில்ல போட்டா அவனோட வாழ்க்கை என்ன ஆகுறது. சரின்னு அந்த பையனை விசாரிச்சு பாத்தா, அவன் காதலிக்கிற பொண்ணுக்கு தான் கல்யாணமாம். எனக்கு மாப்பிளைய பிடிக்கல, என்னைய வந்து கூட்டிட்டு போ இல்லைன்னா செத்துடுவேன்னு அந்த பொண்ணு சொன்னதுனால தான் அவன் அங்க போயிருக்கான்னு தெரிய வருது. உடனே வெற்றி ஜட்ஜ் சார் ரொம்ப நேர்மையானவர் அவருக்கு என்ன பண்ணனும்னு தெரியும்னு சொல்றான். போற போக்க பாத்தா வெற்றியோடு நடவடிக்கைய பாத்து ஜட்ஜ் மனசு மாறி மருமகனா ஏத்துப்பார் போலையே வெயிட் பண்ணி பாப்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…