Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திருச்சிற்றம்பலம் கதை எழுதியது தனுஷ் தான்...இயக்குனர் ஓபன் டாக்..!

madhankumar August 05, 2022 & 16:31 [IST]
திருச்சிற்றம்பலம் கதை எழுதியது தனுஷ் தான்...இயக்குனர் ஓபன் டாக்..!Representative Image.

நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் "திருச்சிற்றம்பலம்" படத்தில் நடித்து முடித்துள்ளார். உத்தமபுத்திரன், குட்டி, யாரடி நீ மோகினி, ஆகிய படங்களை தொடர்ந்து 4வது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. 

மேலும் மாப்பிள்ளை, படிக்காதவன் படத்தை அடுத்து 3வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தனுஷ் நடிக்கும் இந்த படத்தை தயாரித்துள்ளது. மேலும் கடந்த 7 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி கூட்டணியான (DNA) தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

மேலும் இந்த திருச்சிற்றபலம் படத்தில் இருந்து "தாய் கிழவி" "லைஃப் ஆப் பழம்" "மேகம் கருகாதா" "தேன்மொழி" ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வழக்கம் போல அனிருத் இசை என்றாலே தனுஷ் தான் அனைத்து பாடல்களையும் எழுதுவார், அதே போல இந்த படத்தில் 3 பாடல்களை தனுஷ் எழுதி பாடியுள்ளார்.

இந்நிலையில் வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த படத்தின் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவகர், திருச்சிற்றம்பலம் கதையை எழுதியது தனுஷ் தான் என கூறியுள்ளார். மேலும் தனுஷ் எனக்கு ஒரு நல்ல நண்பர் எனவும், அவரிடம் பேஸிக்காகவே ஸ்க்ரிப்ட் நாலேஜ் இருக்கிறது என கூறியுள்ளார். அந்த வகையில் தனுஷ் எழுதியிருக்கும் அட்டகாசமான கதை திருச்சிற்றம்பலம். நிச்சயம் இந்த படம் குடும்பங்களை கொண்டாட வைக்கும் என அவர் கூறியுள்ளார்.

இதே போல தனுஷ் அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் "நானே வருவேன்" படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த படமும் விரைவில் வெளியாக உள்ளது, படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருவதாக படக்குழு தெரிவித்திருந்தது. இந்த படம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த செல்வராகவன் தனுஷும் நானும் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என பேசிக்கொண்டிருந்தோம் அப்போது "புதுப்பேட்டை 2" "ஆயிரத்தில் ஒருவன் 2" இது இரண்டும் அல்லாத வேறு படம் என விவாதித்துக்கொண்டிருந்த போது தனுஷ் தான் "நானே வருவேன்" கதையை எனக்கு கூறினார்.

அதன் பின்னர் தான் இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் ஈடுபட்டு கதையை முழுமையாக தயார் செய்தேன் என கூறியிருந்தார். இந்நிலையில் அடுத்தடுத்து வெளியாகவிருக்கும் இரண்டு படங்களின் கதையும் நடிகர் தனுஷ் கூறியது தான் என்ற செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதில் "திருச்சிற்றம்பலம்" வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் "நானே வருவேன்" படம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்