விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திலும் கதாநாயகியாக நடிக்க திரிஷாவை அழைத்திருக்கிறார்களாம். இதனால் ஏகப்பட்ட குழப்பத்தில் இருக்கிறாராம் திரிஷா. இதுகுறித்து திரிஷாவின் நெருங்கிய வட்டாரத்திலிருந்து வந்த தகவலின் அடிப்படையில், ராங்கி படத்துக்கு பிறகு திரிஷா மிகவும் பிஸியாகி விடுவார் என்கிறார்கள்.
ரஜினி தவிர மற்ற அனைவரோடும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய திரிஷாவுக்கு பேட்ட படம் மட்டும் சுமாரான வேலையை மட்டும் வழங்கியது. ஆனால் கணக்குப்படி அனைத்து சூப்பர் ஸ்டாருடனும் நடித்துவிட்டார் திரிஷா.
இந்நிலையில், மீண்டும் முதல்ல இருந்து துவங்குவது போல திரிஷா அஜித், விஜய்யுடன் ஜோடி போட காத்திருக்கிறார். பொன்னியின் செல்வனில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய திரிஷா இப்போது லோகேஷ் கனகராஜ் படத்துக்கு ஓகே சொல்லிவிட்டாராம். அடுத்து விக்னேஷ்சிவன் படமும் அவருக்காக காத்திருக்கிறது என்கிறார்கள்.
ஒருவேளை இரண்டு படங்களுக்கும் ஓகே சொல்லி நடித்தால், ஒரே நேரத்தில் அஜித் - விஜய் படங்களில் நடிப்பார் திரிஷா.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…