சரத்குமார், ஜோதிகா, ஆண்ட்ரியா நடித்து கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான படம் 'பச்சைக்கிளி முத்துச்சரம்'. இந்த படத்தில் வரும் 'உனக்கு நானே உருகும் இரவில்' என்ற சமீபத்தில் அனைவரது நெஞ்சங்களையும் கொள்ளையடித்துவிட்டது. இந்த பாடலை பாம்பே ஜெயஸ்ரீ பாடியுள்ளார். இப்பாடலை எழுதியவர் ரோகினி, உருகும் அளவிற்கு இப்பாடலுக்கு இசை கொடுத்தவர் நம்ம ஹாரிஸ் ஜெயராஜ். ஆனால், இப்போது பிரபல பாடகி பிரித் (Singer Pritt) பாடிய இந்த பாடல் மனதை உருக்கும் அளவிற்கு அனைவரது நெஞ்சங்களிலும் பதிந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல், இவர் குரலில் பாடிய இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் தீயாய் வைரலாகி வருகிறது. நம்மில் பலரும் இந்த பாடலை ரிங்டோனாகவே இன்னேரம் செட் பண்ணிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. ஏனென்றால், அந்த அளவிற்கு இருக்கிறது அந்த பாடலும், குரலும்.
மின்னும் பனி சாரல்
உள்நெஞ்சில் சேர்ந்தாலே
கண்ணில் உன்னை வைத்து
பெண் தைத்து கொண்டாளே
வெண்ணிலா தூவின்
தன் காதல் சொன்னாளே
மல்லிகை வாசம்
உன் பேச்சில் கண்டாளே
பொன் மான் இவளா
உன் வானவில்லா
பொன் மான் இவளா
உன் வானவில்லா
உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருவும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திட வா
சிறுக சிறுக உன்னில் என்னை
தொலைத்து மொழி சொல்லவா
சொல்லால் சொல்லும் என்னை வாட்டும்
ரணமும் தேன் அல்லவா
உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
ஏனோ நம் பொய் வார்த்தையே தான்
ஏன் அதில் உன் என் மௌனமே தான்
உதட்டில் சிரிப்பை தந்தாய்
மனதில் கனத்தை தந்தாய்
ஒரு முறை எஉன்னை எனக்கென்று
சுவாசிக்கவா
மறுமுறை உன்னை புதிதாக சுவாசிக்கவா
உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருவும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திட வா
தீபோல் தேன்போல் சலனமே தான்
மதியின் நிம்மதி சிதையவே தான்
நிழலை விட்டு சென்றாயே
நினைவை வெட்டி சென்றாயே
இனி ஒரு பிறவி உன்னோடு வாழ்ந்திடவா
அது வரை என்னை காற்றோடு சேர்த்திடவா
உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருவும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திட வா
சிறுக சிறுக உன்னில் என்னை
தொலைத்து மொழி சொல்லவா
சொல்லால் சொல்லும் என்னை வாட்டும்
ரணமும் தேன் அல்லவா, ரணமும் தேன் அல்லவா, ரணமும் தேன் அல்லவா
Minnum Panichaaral
Ullnenjil Sernthale
Kannil Unnai Vaithu
Pen Thaithu Kondale
Vennilaa Thoovin
Than Kaadhal Sonnale
Malligai Vaasam
Un Pechil Kandale
Pon Maan Ivala
Un Vaanavila
Pon Maan Ivala
Un Vaanavila
Unakkul Naane Urugum Iravil
Ullathai Naan Sollava
Maruvum Manathin Ragasiya Araiyil
Othigai Paarthida Vaa
Siruga Siruga Unnil Ennai
Tholaithu Mozhi Sollava
Solla Sollum Ennai Vaattum
Ranamum Then Allava
Unnakkul Naane Urughum Iravil
Ullathai Naan Sollava
Yeno Nam Poi Vaarthaye Thaan
Yen Athil Un En Mouname Thaan
Uthattil Sirippai Thanthaai
Manathil Ganathai Thanthaai
Oru Murai Unnai Enakendru Swasikkavaa
Marumurai Unnai Puthithaaga Swasikkavaa
Unakkul Naane Urugum Iravil
Ullathai Naan Sollava
Maruvum Manathin Ragasiya Araiyil
Othigai Paarthida Vaa
Theepol Thenpol Salaname Thaan
Mathiyin Nimmathi Sidhaiyave Thaan
Nizhalai Vittu Sendraye
Ninaivai Vetti Sendraye
Ini Oru Piravi Unnodu Vaazhndhidavaa
Athu Varai Ennai Kaatrodu Serthidavaa
Unakkul Naane Urugum Iravil
Ullathai Naan Sollava
Maruvum Manathin Ragasiya Araiyil
Othigai Paarthida Vaa
Siruga Siruga Unnil Ennai
Tholaithu Mozhi Sollava
Solla Sollum Ennai Vaattum
Ranamum Then Allava, Ranamum Then Allava, Ranamum Then Allava
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…