திறந்த வெளி கக்கூஸ் போல யார் யாரோ யூடியூபர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் திடீரென ஒரு சேனலைத் துவங்கி அதில் அசிங்க அசிங்கமாக படத்தைப் பற்றி கூறியிருக்கிறார்கள். இதனால் படம் தோல்வியடைந்தது என வடிவேலு கூறியிருப்பது யூடியூபர்கள், மீம் கிரியேட்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாய் சேகர் படத்தின் மிகப் பெரிய படுதோல்விக்கு பிறகு வடிவேலுவிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் படத்தின் தோல்விக்கு காரணம் என்ன என கேட்கப்பட்ட கேள்விக்கு இப்படி பதில் கூறி அவரை தூக்கி கொண்டாடிய மீம் கிரியேட்டர்கள், யூடியூப் சேனல்கள் மீது மலத்தை வாரி இறைத்திருக்கிறார் வடிவேலு.
வேண்டுமென்றே நெகடிவ் கமெண்ட்கள் கொடுத்ததாகவும் இந்த நெகடிவிட்டி காரணமாகத்தான் படம் ஓடவில்லை எனவும் ஆனால் படம் நல்லாத் தான் இருந்தது எனவும் கூறியிருப்பது கொஞ்சம் ஷாக் தான்.
இதுகுறித்து சில மீம் கிரியேட்டர்கள், யூடியூபர்கள் படம் நன்றாக இருந்தால் அதுபாட்டுக்கு ஓடப்போகிறது. நாங்கள் நல்லவிதமாக சொல்லவேண்டும் என்றால் படம் நன்றாக இருக்க வேண்டுமே. நன்றாக இருக்கும்போது வேண்டுமென்றே ஏன் நல்லா இல்லை என சொல்லப் போகிறோம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
வடிவேலு ஆக்டிவாக இல்லாத நிலையில் சினிமாத் துறையில் அவரை ஆக்டிவாக வைத்திருந்தது மீம் கிரியேட்டர்களும் யூடியூபர்களும் தான். அவர்களையே ஒரு நொடியில் தூக்கி அடித்துவிட்டாரே வடிவேலு.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…