அண்ணன் தங்கை பாசத்தை பறைசாற்றும் பல எபிசோட்களைக் கொண்டு வந்து ரசிகர்களின் மனதில் பாசத்தை இறக்கிய சீரியல் வானத்தைப் போல. இந்த சீரியலைப் பார்த்துதான் ரஜினிகாந்தின் அண்ணாத்தே படமே எடுத்தார்கள் என மீம் போடும் அளவுக்கு பரீட்சியமான சீரியலாக இருந்த இந்த சீரியல் தற்போது வழக்கம்போல நாலு பேர் நாலு மூலைக்கு நின்று அழுவார்கள் எனும் டெம்ப்ளேட்டுக்குள் வந்துவிட்டதோ என பலரும் பேசினார்கள்.
நேயர்களின் பல்ஸை பிடித்து பார்த்தாரோ இயக்குநர், அதிரடி ஆக்சன்களை தொகுத்து வழங்கி சீரியலை சுவாரஸ்யபடுத்தியுள்ளார். பொன்னிக்கும் சரவணனுக்கும் கல்யாணம், சின்ராசுக்கும் தாசில்தாருக்கும் கல்யாணம் பண்ணி வச்சி வித்தியாசமாக கொண்டு செல்ல வாய்ப்பில்லை என நினைத்து காதல்களை முறித்து பொன்னிக்கும் சின்ராசுக்கும் திருமணத்தை நடத்தி வேடிக்கை பார்க்கிறார் இயக்குநர்.
தன்னை ரிலீஸ் செய்ய வந்த சரவணனையே வசமாக சிக்க வைத்து வெளியில் வராத மாதிரி கேஸ் போட்டு உள்ள தள்ளிய ராஜபாண்டியின் ராஜதந்திரம் பற்றி கூறுவதா, தன் அண்ணனுக்கு நல்ல வாழ்க்கை ஏற்படுத்தி தாரன், தாசில்தாருக்கு நல்ல வாழ்க்கை ஏற்படுத்தி தாரன், பொன்னிக்கு நல்ல வாழ்க்கை ஏற்படுத்தி தாரன்னு சொல்லி எல்லார் தலையிலும் மண்ணை அள்ளி போட்ட துளசியைப் பற்றி சொல்லவா என சீரியல் படு சீரியஸாக சென்று கொண்டிருக்கிறது.
சரவணனின் குடும்பத்துக்கு தன்னுடைய தங்க சங்கிலியை எடுத்து கொடுத்த பொன்னி, மீண்டும் அவர்களை வரவழைத்து வீட்டிலிருந்த பணக்கட்டை எடுத்து கொடுக்கிறாள். இதை சின்ராசு பார்த்தாலும் வேறு வழியில்லாமல் அமைதியாக இருக்கிறான். இதனைத் தொடர்ந்து காணாமல் போன பணத்தை தேடுகிறார்கள்.
கோமு அவளது மகளை சந்தேகப்படுகிறாள் துளசி. இப்டியாக இன்றைய நாள் எபிசோட் விறுவிறுப்பாக செல்கிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…