திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு வந்த நடிகர் வடிவேலுவிடம் வாரிசா துணிவா பர்ஸ்ட் எதை பார்ப்பீங்க என்ற கேள்விக்கு சிரித்துக் கொண்டே கலகலப்பாக பதில் கூறினார்.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் தோல்வியை அடுத்து தான் இனி கதாநாயகனாக நடிக்கமாட்டேன் என்கிற முடிவெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது இஷ்ட தெய்வமான திருச்செந்தூர் சுப்ரமணியர் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.
வடிவேலு கோவிலுக்கு வரும் செய்தி எப்படியோ பத்திரிகையாளர்களுக்கு தெரிந்த நிலையில், அனைவரும் அதிரடியாக வந்து குவிந்தனர். பல கேள்விகளைக் கேட்ட நிலையிலும், அவர் நிதானமாக அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
கடைசியாக வாரிசா, துணிவா எந்த படத்துக்கு போவிங்க என கேட்கப்பட்ட கேள்விக்கு, இரு படங்களுமே வெற்றியடைய வேண்டும். அதேபோல் எல்லா படங்களும் வெற்றி பெற வேண்டும். சினிமா நன்றாக இருந்தால்தான் அனைவரும் நன்றாக இருக்க முடியும் என்று கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…