நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ரிலீஸ் குறித்த சர்ச்சைகள் கடந்த சில நாள்களாகவே இருந்து வருகின்றன. இதில், விஜய்யின் வாரிசு படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்பட்ட நிலையில் தெலுங்கில் இதற்கு ஒரு பிரச்சனை துவங்கியது.
அதாவது நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டும் தான் சங்கராந்தி ரிலீஸில் முன்னுரிமை, டப்பிங் படங்களுக்கு இல்லை என தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிக்கை வெளியிட்டு இருந்தது.
இதனால், தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதில், உங்க படம் மட்டும் தமிழ்நாட்டில் ஓடணும், தமிழ் படம் அங்கே ரிலீஸ் ஆக கூடாதா என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கென சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களிடம் பேசிய தேனாண்டாள் முரளி வாரிசு படத்திற்கு வந்த சிக்கல் பற்றி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம் என்றார்.
மேலும், வாரிசு ரிலீஸ் குறித்து அவர் தெரிவித்ததாவது, “அவர்கள் சொன்ன விஷயங்களின் படி, வாரிசு படத்திற்கு சிக்கல் இருக்காது. கண்டிப்பாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும்” என உறுதியளித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…