மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட மொழிகளிலும் திரைப்படம் இயக்க வாய்ப்புகள் குவிந்த வருகின்றன என முன்னதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் வெங்கட் பிரபு. இதில் அவர் முதலாவதாக தேர்ந்தெடுத்தது தெலுங்கு படம்.
நாகசைத்தன்யா நடிக்கும் 22வது படத்தை இயக்கும் வெங்கட் பிரபு இதனைத் தொடர்ந்து தமிழ், கன்னட மொழிகளிலும் படத்தை இயக்குவார். நாகசைத்தன்யா நடிப்பில் சமீபத்தில் இரண்டு படங்கள் வெளியாகின. அதில் ஒன்று தாங்க்யூ இது அவரே கதாநாயகனாக நடித்த படம். இன்னொன்று ஹிந்தி படமான லால் சிங் சத்தா. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த இரண்டு படங்களும் தோல்வியடைந்த நிலையில், அடுத்த படத்துக்கு சிக்கல்.
நாகசைத்தன்யாவின் 22வது படத்தைத் தயாரித்து வரும் நிறுவனம் இப்போது இந்த படத்தை டிராப் செய்யும் யோசனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் நாகசைத்தன்யாவும் வெங்கட்பிரபுவும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…