சமந்தா அவர்கள் நேர்காணல் ஒன்றில் கண்ணீர் விட்டு தன்னுடைய உடல் நிலையைப் பற்றி பேசும் வீடியோ ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை சமந்தாவை பாதித்திருக்கும் Myositis நோயின் காரணங்களும் அறிகுறிகளும்....
அவர் நடித்த 'யசோதா' படத்தின் வெளியீட்டிற்காக தயாராகி வந்தார் சமந்தா ரூத் பிரபு. அப்போது எதார்த்தமாக அவரின் உடல்நிலை பேசிய அவர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அது பார்ப்பவர்களின் மனதை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவர் கூறியது தான் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என்றும், தனது உடல்நிலை குறித்த மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை ஊடகங்கள் தவிர்த்திருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியது, " நான் எனது பதிவில் (இன்ஸ்டாகிராம்) கூறியது போல், சில நாட்கள் நல்லதாக இருக்கும், சில நாட்கள் கெட்டதாக இருக்கும். சில நாட்களில், ஒரு அடி எடுத்து வைப்பது கூட கடினமாக இருப்பதாக உணர்ந்தேன். ஆனால் நான் இப்போது திரும்பிப் பார்க்கும்போது, இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறேன் என ஆச்சரியப்படுகிறேன். நான் இங்கே போராட வந்திருக்கிறேன்.
நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது நிலைமை உயிருக்கு ஆபத்தானது என்று விளக்கும் பல கட்டுரைகளை நான் பார்த்தேன். இப்போது என்னுடைய நிலை உயிருக்கு ஆபத்தானது அல்ல. நான் இன்னும் இறக்கவில்லை. அந்த தலைப்புச் செய்திகள் மிகவும் அவசியமானவை என்று தோன்றவில்லை” எனக் குறிப்பிட்டு உணர்ச்சிவசப்பட்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…