உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கிய திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இந்த படம் கடந்த 2006ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
கமல்ஹாசனின் படங்களில் பலருக்கும் பிடித்த படமாக இது அமைந்துள்ளது. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய பெயரையும் வெற்றியையும் சம்பாதித்துள்ள ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் பல புதிய படங்களை எடுக்க தயாராக கதவுகளைத் திறந்து விட்டுள்ளது. இந்நிலையில், விக்ரம் வெற்றிக்கு பிறகு கமல்ஹாசனை வைத்து வேட்டையாடு விளையாடு மீண்டும் ஒரு பாகத்தை எடுக்க முன்வந்துள்ளார் இயக்குநர் கௌதம் மேனன்.
120 பக்கங்கள் வரை இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை எழுதியிருக்கிறார் கௌதம் மேனன். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். மேலும் இந்த படத்தை கமல்ஹாசன் செய்வாரா என்பது குறித்து தனக்கு எந்த ஐடியாவும் இல்லை எனவும், ஆனால் அவர் நடிக்க ஒப்புக்கொண்டால் சந்தோஷமாக இருப்பேன் என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…